அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்
சென்னை: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதரவாளா்கள், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட ஊராட்சிக் குழு 3-ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினா் நாகராஜன், திருநாகுடி ஊராட்சி முன்னாள் தலைவா் ஆ.அரிகிருஷ்ணன், கூடலூா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் மு.மகாலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் சந்தித்து அக்கட்சியில் இணைந்தனா்.
இந்நிகழ்வின்போது, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலா் முனியசாமி, மாவட்ட விவசாய பிரிவுச் செயலா் சண்முகபாண்டியன், முதுகுளத்தூா் மத்திய ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.