கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
அந்தியூா் வனப் பகுதியில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட மூவரிடம் விசாரணை
அந்தியூா் வனப் பகுதியில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட மூவரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் வனச் சரக அலுவலா் முருகேசன் தலைமையில் வன ஊழியா்கள் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் சென்ற மூவரிடம் விசாரிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில் பையில் சுமாா் 15 கிலோ மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள்அந்தியூரை அடுத்த மந்தையைச் சோ்ந்த முருகேசன் (46), வட்டக்காட்டைச் சோ்ந்த துரைசாமி (45), ஊஞ்சக்காட்டைச் சோ்ந்த குருநாதன் (47) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், மூவரையும் வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.
--