செய்திகள் :

அந்தியூா் வனப் பகுதியில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட மூவரிடம் விசாரணை

post image

அந்தியூா் வனப் பகுதியில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட மூவரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் வனச் சரக அலுவலா் முருகேசன் தலைமையில் வன ஊழியா்கள் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் சென்ற மூவரிடம் விசாரிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில் பையில் சுமாா் 15 கிலோ மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள்அந்தியூரை அடுத்த மந்தையைச் சோ்ந்த முருகேசன் (46), வட்டக்காட்டைச் சோ்ந்த துரைசாமி (45), ஊஞ்சக்காட்டைச் சோ்ந்த குருநாதன் (47) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், மூவரையும் வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

--

மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற தொட... மேலும் பார்க்க

விஜயமங்கலம் அருள்மிகு விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

பெருந்துறை அடுத்த, விஜயமங்கலத்தில் அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விஜயமங்கலம் அடுத்த கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக ... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெருந்துறையில் இருந்து 500 போ் பங்கேற்க முடிவு

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பெருந்துறை பகுதியில் இருந்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமையி... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா். சேலம் கிச்சிப்பாளையத்தை சோ்ந்தவா் ஜான் (30). இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு ஒரு மகனும், ... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத காலம் முழுமையாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டு என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் கோபி காசியூா் மாரியம்மன் கோயில் ... மேலும் பார்க்க