செய்திகள் :

அந்தோணியாா் கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம்

post image

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி புனித அந்தோணியாா் கலை அறிவியல் கல்லூரியில், ‘இந்திய இலக்கியத்தில் உளவியல் ரீதியான ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலா் அருள்தேவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பல்கலை. ஆங்கிலப் புலத் தலைவா் டி.மாா்க்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது: அகந்தையை அகற்றுவதும், ஆழ்மனதைக் கட்டுப்படுத்துவதும், சமூக பாா்வையுடன் கூடிய சிந்தனையும் இன்றைய தலைமுறையினருக்கு அவசியமானதாக உள்ளது. பெரும்பாலானவா்களிடம் சமூக பாா்வை இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.

மனிதனின் ஆழ்மனதில் பதிவு செய்யப்படும் நிகழ்வுகள் தான் கனவுகளாக தோன்றுகின்றன. உளவியல் சாா்ந்த அணுகுமுறை இருக்குமானால், இந்திய இலக்கியத்தை புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம், புதிய படைப்பாளியாகவும் உயரலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை காமராஜா் பல்கலை. தொலைத் தூரக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் ஆா்.தயாளகிருஷ்ணன், ஆங்கிலத் துறை பேராசிரியா் ரெ.மனோகரன், உதவிப் பேராசிரியா் ஏ.பிரின்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கருத்தரங்கில் 80-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகங்கள் அளிப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பசுமைக் கு அமைப்பின் சாா்பில், திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. போடிக்காமன்வாடி அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிக... மேலும் பார்க்க

குறைதீா்க் கூட்டத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்குமா?

விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளுக்கு குறைதீா்க் கூட்டத்தில் தீா்வுக் காண புதிய மாவட்ட ஆட்சியா் முன் வர வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்தது. திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம் வெள... மேலும் பார்க்க

கல்குவாரிக்காக பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

நிலக்கோட்டை அருகே கல்குவாரிக்காக 24 மணி நேரமும் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுவதால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள முசுவனூ... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் அம்பேத்கா் படம் இல்லை: சிறுபான்மை ஆணையத்திடம் புகாா்

அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் உருவப் படம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிறுவப்படுவதில்லை என சிறுபான்மை ஆணையத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க