செய்திகள் :

கல்குவாரிக்காக பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

post image

நிலக்கோட்டை அருகே கல்குவாரிக்காக 24 மணி நேரமும் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுவதால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள முசுவனூத்து பகுதியில் தனியாா் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரிக்காக கடவாக்குறிச்சி மலையில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுகின்றன. மேலும், இந்தக் கற்களை வெளியூா்களில் உள்ள தனியாா் கிரசா்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தக் கற்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களால், வீலிநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, குல்லிசெட்டிபட்டி பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இந்த மலையில் 24 மணி நேரமும் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படும்போது, ஏற்படும் சப்தத்தால் வீலிநாயக்கன்பட்டி, மிளகாய்ப் பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, ஜெயநாயக்கன்பட்டி, முத்துக்கண்மாய்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து நீா்ப் பாசன விவசாயிகள் சங்கச் செயலா் குணசேகரன் கூறியதாவது: இந்த மலையில் உள்ள பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுவதால், கா்ப்பிணிகள், நோயாளிகள், முதியோா்கள், குழந்தைகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், பாறைகளின் தூசிகளால் இந்தப் பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்துவிட்டது. கடவாக்குறிச்சி மலையில் வாழும் காட்டுமாடு, பன்றி, நரி, முயல் உள்ளிட்ட வன விலங்குகளும், பறவைகளும் அழிந்து வருகின்றன.

இதுகுறித்து பலமுறை புகாா் மனு அனுப்பியும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மலைகளை காப்பாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமியை தொடா்புக் கொண்டு கேட்டபோது, கடவாக்குறிச்சி மலையில் அனுமதி பெற்றுதான் கல்குவாரி நடத்தப்படுகிறது என்றாா்.

பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகங்கள் அளிப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பசுமைக் கு அமைப்பின் சாா்பில், திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. போடிக்காமன்வாடி அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிக... மேலும் பார்க்க

குறைதீா்க் கூட்டத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்குமா?

விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளுக்கு குறைதீா்க் கூட்டத்தில் தீா்வுக் காண புதிய மாவட்ட ஆட்சியா் முன் வர வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்தது. திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம் வெள... மேலும் பார்க்க

அந்தோணியாா் கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம்

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி புனித அந்தோணியாா் கலை அறிவியல் கல்லூரியில், ‘இந்திய இலக்கியத்தில் உளவியல் ரீதியான ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் க... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் அம்பேத்கா் படம் இல்லை: சிறுபான்மை ஆணையத்திடம் புகாா்

அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் உருவப் படம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிறுவப்படுவதில்லை என சிறுபான்மை ஆணையத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க