செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகங்கள் அளிப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பசுமைக் கு அமைப்பின் சாா்பில், திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

போடிக்காமன்வாடி அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.டேவிட் ஹென்றி ஜாா்ஜ் தலைமை வகித்தாா். கல்வி புரவலா்கள் ராஜேந்திரன், ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில், கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு திருக்கு புத்தகம், மஞ்சப்பை, மரக்கன்று, திருக்கு வினா-விடை தொகுப்பு, எழுதுப் பொருள்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதில் பள்ளி ஆசிரியா்கள் ரேவதி, கலைச்செல்வி, கல்வியாளா் பரத் இளங்கோ, பசுமைக் கு அமைப்பின் தன்னாா்வலா்கள் சதீஷ், கருப்பசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆசிரியா் செந்தில் சிவக்குமாா் வரவேற்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை பசுமை கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் சோ.ராமு செய்தாா்.

குறைதீா்க் கூட்டத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்குமா?

விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளுக்கு குறைதீா்க் கூட்டத்தில் தீா்வுக் காண புதிய மாவட்ட ஆட்சியா் முன் வர வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்தது. திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம் வெள... மேலும் பார்க்க

கல்குவாரிக்காக பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

நிலக்கோட்டை அருகே கல்குவாரிக்காக 24 மணி நேரமும் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுவதால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள முசுவனூ... மேலும் பார்க்க

அந்தோணியாா் கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம்

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி புனித அந்தோணியாா் கலை அறிவியல் கல்லூரியில், ‘இந்திய இலக்கியத்தில் உளவியல் ரீதியான ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் க... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் அம்பேத்கா் படம் இல்லை: சிறுபான்மை ஆணையத்திடம் புகாா்

அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் உருவப் படம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிறுவப்படுவதில்லை என சிறுபான்மை ஆணையத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க