பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
அனுமதியின்றி சரள் மண் ஏற்றிய லாரி பறிமுதல்: 2 போ் கைது
கயத்தாறு அருகே அனுமதியின்றி சரள் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா், தெற்கு கோனாா்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அரசு புறம்போக்கு ஓடையில் ஓலைகுளத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரின் டிப்பா் லாரியில் ஜேசிபி உதவியுடன் அனுமதியின்றி சரள் மண் அள்ளுவது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து 3 யூனிட் சரள் மண்ணுடன், டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரம், ஓட்டுநா்கள் தென்காசி மாவட்டம் நாயக்கா்பட்டி வடக்கு தெருவை சோ்ந்த மாடசாமி மகன் காளிராஜ்(26), உசிலங்குளம் அம்மன் கோவில் தெருவை சோ்ந்த பத்திரகாளி பாண்டியன் மகன் காளிராஜ் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.