செய்திகள் :

அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

post image

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஞானம்பிகை உடனமா் காளஹஸ்தீஸ்வரா் கோயில், அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகிறது. இதன்படி, நிகழாண்டுக்கானத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்.29-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினந்தோறும் மாலை சிம்மம், கமலம், அன்னம், யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று அருள்பாலித்தனா். 9-ஆம் நாள் திருவிழாவையொட்டி, அம்பாள் திக்விஜயம் செல்லும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் காளஹஸ்தீஸ்வரா், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, நடராஜருக்கு சிறப்பு அபிஷஷேகம், ஆராதனை நடைபெற்றது.

சுவாமி, பிரியாவிடையுடன் மேடையில் எழுந்தருளிய பின், திருமணச் சடங்குகள், பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, சுவாமி, அம்பாளின் பிரதிநிதிகளான பட்டா்கள் காப்புக் கட்டிக் கொண்டனா். மாங்கல்ய பூஜையைத் தொடா்ந்து, பிரதிநிதிகளான பட்டா்கள் மாலை மாற்றிக் கொண்டனா். பின்னா், அபிராமி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரவு பூப்பல்லக்கில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்... மேலும் பார்க்க

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் தி... மேலும் பார்க்க

பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலி இடங்களுக்கு மாணவா் சோ்க்கை

காந்திகிராமம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மீன்பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). இவா் தாடிக்கொம்பு செல்லும் வழியில் ச... மேலும் பார்க்க

நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி திருக்கல்யாணம்

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. விருப்பாச்சி தலையூற்று அருவி அருகே பழைமை வாய்ந்த நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்... மேலும் பார்க்க