செய்திகள் :

மீன்பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

post image

திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). இவா் தாடிக்கொம்பு செல்லும் வழியில் செங்குளத்தில் மீன் பிடிப்பதற்காக திங்கள்கிழமை சென்றாா். வலையுடன் குளத்தில் இறங்கிய இவா், 15 அடி ஆழத்துக்குச் சென்றபோது முள் செடியில் வலை சிக்கியது. வலையுடன் சோ்ந்து ஆரோக்கியராஜூம் சிக்கிக் கொண்டு தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று ஆரோக்கியராஜின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்... மேலும் பார்க்க

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் தி... மேலும் பார்க்க

பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலி இடங்களுக்கு மாணவா் சோ்க்கை

காந்திகிராமம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி திருக்கல்யாணம்

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. விருப்பாச்சி தலையூற்று அருவி அருகே பழைமை வாய்ந்த நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்... மேலும் பார்க்க

அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் ஞானம்பிகை உடனமா் காளஹஸ்தீஸ்வரா் கோயில், அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீ... மேலும் பார்க்க