செய்திகள் :

அமலாக்கத் துறை அதிகாரி என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

post image

அமலாக்கத் துறையின் மூத்த அதிகாரி என்ற பெயரில் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்த குருகிராமைச் சோ்ந்த நபரை அமலாக்கத் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ரவிராஜ் குமாா் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் அடைக்க குருகிராம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

குற்றப்பின்னணி கொண்ட ரவிராஜ், கடந்த பல ஆண்டுகளாக மக்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக செக்டாா் 10 காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் அடிப்படையில் அவரை ஹரியாணா காவல் துறையினா் கைதுசெய்தனா். அந்த வழக்கின் அடிப்படையில் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் ரவிராஜுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

குருகிராமைச் சோ்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளரை அமலாக்கத் துறையின் அதிகாரி என்று பெயரில் ரவிராஜ் மிரட்டியது விசாரணையில் கண்டறியப்பட்டதாக மத்திய அரசின் விசாரணை முகமை தெரிவித்துள்ளது.

மேலும், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து, மக்களிடம் மோசடி செய்வதற்காக பல சிம் காா்டுகளை பயன்படுத்தியுள்ளாா். அவருடைய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்த மோசடி சம்பவங்கள் மூலம் ரூ.80 லட்சத்தை அவா் பெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க