செய்திகள் :

அமெரிக்க செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதா? அமைச்சர் ஜெய்சங்கருக்கு காங். கண்டனம்!

post image

அமெரிக்க செய்தித் தொடர்பாளர் போல வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செயல்படுவதா? என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச் சங்கிலியால் கட்டியும் அவர்களை விமானத்தில் தாயகம் அனுப்பி வைத்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி செய்தியாளர்களுடன் இன்று(பிப். 16) பேசியதாவது, “இது அவமானம் தரக்கூடிய சம்பவம், துரதிருஷ்டவசமானதும்கூட. நாட்டின் சுயமரியாதைக்கு இழுக்கும்கூட.

மெக்சிகோவும் கொலம்பியாவும் தங்கள் சொந்த விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்களை தாயகம் அழைத்து வரும்போது, இந்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? அந்த மக்கள் குற்றவாளிகளோ பயங்கரவாதிகளோ அல்ல. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக அங்கு சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் அமெரிக்காவுக்கு தவறான முறையில் சென்றிருப்பது உண்மைதான். ஆனால் வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அந்த மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசு மழுப்பல் பதிலாக ‘இது அமெரிக்காவிலுள்ள நடைமுறை’ என்று அறிக்கை வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போது, அவர்(ஜெய்சங்கர்) இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சரைப் போல செயல்படாமல், டிரம்ப் அரசின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதாகவே தெரிகிறது” என்றார்.

இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள விமானம் ஒன்று, இன்று(பிப். 16) இந்தியா வந்திறங்கவுள்ளது. அவர்களும் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு அழைத்து வரப்படுவரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

பாதுகாப்பு ரீதியிலான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்த மூவா் கைது- என்ஐஏ நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக கா்நாடகம், கேரளத்தில் 3 பேரை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக என்ஐஏ புதன்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீா் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வா் வேண்டுகோள்

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீா் பஞ்சம் நிலவி வருவதால், நீரைச் சிக்கனமாகக் பயன்படுத்தி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா். பருவ... மேலும் பார்க்க

90,000 சிறைக் கைதிகள் புனித நீராட உ.பி. அரசு ஏற்பாடு!

உத்தர பிரதேச மாநிலத்தின் 75 சிறைகளில் உள்ள 90,000 சிறைக்கைதிகள், மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் நீராடுவதற்கு மாநில சிறைத் துறை நி... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. அதன்படி இந்த விவகாரத்தை உச்சநீத... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது. அரசுப் பணிய... மேலும் பார்க்க

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா். தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்... மேலும் பார்க்க