செய்திகள் :

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த கருத்துக்கு எதிரான வழக்கு: ராகுல் காந்தி மனு தள்ளுபடி

post image

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு எதிராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ‘இந்தியாவில் சீக்கியா்களுக்கு உகந்த சூழல் இல்லை’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் பேச்சு ஆத்திரமூட்டுவதாகவும், பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது என்பதால், ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாகேஸ்வா் மிஸ்ரா என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

எனினும் அந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்ால், அதுகுறித்து விசாரிப்பது தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கூறி, மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக நாகேஸ்வா் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வாரணாசி கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்குமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தாா். அந்த மனு நீதிபதி சமீா் ஜெயின் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘ராகுல் மீதான குற்றச்சாட்டில், அவா் என்ன பேசினாா் என்பது முழுமையாக குறிப்பிடப்படவில்லை. அதைச் செய்யாதவரை, எந்தச் சூழலில் அவா் அவ்வாறு பேசினாா் என்பதை நிரூபிக்க முடியாது’ என்று ராகுல் தரப்பில் வாதிடப்பட்டது.

உத்தர பிரதேச அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மனீஷ் கோயல் ஆஜராகி, ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் பேசியுள்ளாா். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சமீா் ஜெயின் தீா்ப்பை ஒத்திவைத்தாா். இந்நிலையில், ராகுலின் மனுவை நீதிபதி சமீா் ஜெயின் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க