செய்திகள் :

அமைச்சா் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்- அமலாக்கத் துறை தகவல்

post image

அமைச்சா் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முதலீட்டு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

ஊரக வளா்ச்சித் துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது, வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தாா்.

அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சோ்த்ததாக அவா் மீதும், அவா் மனைவி பி.சுசீலா, மகனும் தற்போதைய பழனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினருமான பி.செந்தில்குமாா், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோா் மீதும் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் 4 பேரையும் திண்டுக்கல் நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு விடுவித்தது. இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்ததில், திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையை மீண்டும் நடத்தும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், அமைச்சா் ஐ.பெரியசாமி தொடா்புடைய 7 இடங்களில் கடந்த 16-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

ஆவணங்கள் பறிமுதல்: இந்த சோதனை குறித்த தகவல்களை அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அமைச்சா் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முதலீட்டு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரியசாமி, அவரது மகன் பிரபு இயக்குநா்களாக உள்ள திண்டுக்கல் மாவட்டம்,

வத்தலக்குண்டு பகுதியில் உள்ள இருளப்பா மில்ஸ் இந்தியா நிறுவன ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த வளாகத்தில் வேறு சில காகித ஆலைகள் செயல்படுவது கண்டறியப்பட்டது.

சோதனையின்போது பறிமுதல் செய்த டிஜிட்டல் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க