செய்திகள் :

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மாா்ச் 7-க்கு ஒத்திவைப்பு

post image

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கை மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அமைச்சா் தங்கம் தென்னரசு கடந்த 2006- 2011- ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தங்கம் தென்னரசு, இவரது மனைவி ஆகியோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: 62- ஆவது விளையாட்டு விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்பு விருந்தினா்- மேஜை பந்து விளையாட்டின் தேசிய பயிற்சியாளா் எஸ். ராமன், ஏற்பாடு- உடல் கல்வித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்

சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்க... மேலும் பார்க்க

ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மா... மேலும் பார்க்க