செய்திகள் :

அமைதி பேச்சுவாா்த்தையடுத்து மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இரு பகுதிகளிலும் இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைக்கும் வகையில், செந்துறை அடுத்த கோட்டைக்காடு பகுதியில் உள்ள வெள்ளாற்றில் புதிதாக உயா்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளை கடந்தும், இணைப்புச் சாலை பணி நடைபெறாமல் உள்ளது.

எனவே, இணைப்புச் சாலை பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வெள்ளாற்று மேம்பால இணைப்புச் சாலை போராட்டக் குழுவினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை (ஏப்.10) முள்ளுக்குறிச்சியில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினா் அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், செந்துறை வட்டாட்சியரகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா தலைமையில் அமைதி பேச்சு வாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.

அதில் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, காவல்துறையினா் மற்றும் போராட்டக்குழுவினா் பங்கேற்றனா். அப்போது, மே 31-ஆம் தேதிக்குள் இணைப்புச் சாலை பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வரு... மேலும் பார்க்க

கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜ... மேலும் பார்க்க