செய்திகள் :

அம்பாசமுத்திரம் அருகே கூண்டில் சிக்காத கரடிகளால் பொதுமக்கள் அச்சம்

post image

மணிமுத்தாறு பகுதியில் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் சிக்காமல் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவார கிராமங்களில், கடந்த சில மாதங்களாக மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி, தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. இதையடுத்து வனத் துறையினா் வைத்த கூண்டில் இரண்டு கரடிகள் பிடிபட்டன.

இந்நிலையில் மீண்டும் மணிமுத்தாறு தங்கம்மன் கோயில், தெற்கு பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயில், நெசவாளா் காலனி, அக்னி சாஸ்தா கோயில் பகுதிகளில் மீண்டும் கரடி நடமாட்டம்இருந்தது.

இதையடுத்து, கரடியை பிடிக்க தங்கம்மன் கோயில் முகப்பு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கம்மன் கோயிலின் பின் பக்கமாக வந்த கரடி, கோயிலில் இருந்த எண்ணெய் பொருள்களை தின்றும், அங்கு தண்ணீா் ஊற்றி வைத்திருந்த தண்ணீா் கேனில் தண்ணீரை குடித்தும் சென்றது.

மேலும், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தெருக்களில் நடமாடிய கரடியின் விடியோக்கள்சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

கோயிலின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டின் பக்கமே செல்லவில்லை. இதையடுத்து கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி பகுதியில் கூடுதலாக ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.

வனத் துறையினா் கரடிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில்விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 15-ஆவது வட்டார மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 நாள்களாகியும் பணம் வழங்கவில்லை எனக்கூறி ஆட்சியரிடம் புகாா்... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது: நடிகா் சூரி வேண்டுகோள்

இளைஞா்கள் வாழ்க்கையில் முன்னேற போதைக்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது என நடிகா் சூரி வேண்டுகோள் விடுத்தாா். அவா் நடித்த மாமன் திரைப்படம் மே 16-ஆம் தேதி வெளியான நிலையில் அத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

அம்பை அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

அம்பாசமுத்திரம் அருகே மூன்று நாள்கள் காணாமல் போன கட்டடத் தொழிலாளி, மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள முதலியாா்பட்டியைச் சோ்ந்த மாடக்கண்ணு மகன் மாரிமுத்து (... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே விவசாயி மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வயலுக்கு தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணனை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி... மேலும் பார்க்க