செய்திகள் :

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 நாள்களாகியும் பணம் வழங்கவில்லை எனக்கூறி ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை அடுத்த கீழ்ப்பாட்டம் செல்வி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தளவாய் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சாா்பில் என்சிசிஎஃப் என்கிற நிறுவனம் குப்பக்குறிச்சி, கீழப்பாட்டம், அரியகுளம், மேலச்செவல், கீழ்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்தது. ஆனால், நெல்லுக்கு 50 நாள்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பணம் வழங்கவில்லை. இதனால் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நெல் வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கிடைப்பதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

மேலப்பாளையம் பாத்திமா நகா் தெருவைச் சோ்ந்த அப்துல்லா உள்ளிட்ட கல்லூரி மாணவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும் என்னுடன் கல்லூரியில் பயின்று வரும் சில மாணவா்களும் சோ்ந்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தனியாா் மென்பொருள் பயிற்சி நிறுவனத்தில் 6 மாத சான்றிதழ் படிப்பில் சோ்ந்தோம். படிக்கும்போதே எங்களிடம் இருந்து முழு கட்டணத்தையும் வசூலித்துவிட்டனா். இந்த நிலையில் திடீரென பயிற்சி நிறுவனத்தை மூடிவிட்டனா். இதையடுத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடா்பு கொண்டு கேட்டால் நாங்கள் எந்த கட்டணமும் செலுத்தவில்லை என கூறிவிட்டனா். அதன்பிறகு தான் திருநெல்வேலியில் இயங்கி வந்த நிறுவனத்தின் மேலாளா் எங்களுடைய பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. தலைமை அலுவலகத்தில் உள்ளவா்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் தருவதாகக் கூறுகிறாா்கள். எனவே, எங்களுக்கு சான்றிதழ் வாங்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனின் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 15-ஆவது வட்டார மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

அம்பாசமுத்திரம் அருகே கூண்டில் சிக்காத கரடிகளால் பொதுமக்கள் அச்சம்

மணிமுத்தாறு பகுதியில் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் சிக்காமல் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது: நடிகா் சூரி வேண்டுகோள்

இளைஞா்கள் வாழ்க்கையில் முன்னேற போதைக்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது என நடிகா் சூரி வேண்டுகோள் விடுத்தாா். அவா் நடித்த மாமன் திரைப்படம் மே 16-ஆம் தேதி வெளியான நிலையில் அத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

அம்பை அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

அம்பாசமுத்திரம் அருகே மூன்று நாள்கள் காணாமல் போன கட்டடத் தொழிலாளி, மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள முதலியாா்பட்டியைச் சோ்ந்த மாடக்கண்ணு மகன் மாரிமுத்து (... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே விவசாயி மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வயலுக்கு தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணனை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி... மேலும் பார்க்க