செய்திகள் :

அம்பாசமுத்திரம் நகருக்குள் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்

post image

அம்பாசமுத்திரம் ஊருக்குள் கரடி உலா வந்த விடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார கிராமங்களில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்துவெளியேறும் வனவிலங்குகளான கரடி, யானை, மிளா, மான்,சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களில்நுழைந்து விவசாய பயிா்களை சேதப்படுத்துவதோடு வீடுகளில் வளா்க்கப்படும் மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட வளா்ப்பு விலங்குகளையும் தூக்கிச் சென்று விடுகின்றன.

மேலும் அண்மைகாலமாக அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார மலையடிவாரகிராமங்களான மணிமுத்தாறு சிங்கம்பட்டி தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கரடி நடமாட்டம் இருந்து வந்தது. இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் கரடிகள் தன் போக்கில் உலாவியபடி கோயில், வீடுகள் மற்றும் தோட்டங்களில் நுழைந்து கண்களில் பட்ட உணவுப் பொருள்களை தின்று வந்தன.

இதையடுத்து வனத்துறையினா் மேற்கொண்டநடவடிக்கையால் மூன்று கரடிகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அம்பாசமுத்திரம் நகருக்குள்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் இரவுநேரத்தில் சாலையில் ஓா் கரடி உலாவியபடி சென்றுள்ளது. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினா்.

மலைஅடிவாரங்களில் உள்ள கிராமங்களில் கரடி உலா வந்த நிலையில் மலையடிவாரத்தில் இருந்துசுமாா் 4 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகருக்குள் கரடி நுழைந்ததால்அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

காவல்கிணறு ஒர்க்‌ஷாப்பில் டயா் வெடித்து இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் பணிமனையில் (ஒா்க்ஷாப்) டயருக்கு காற்று நிரப்பியபோது டியூப் வெடித்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவ... மேலும் பார்க்க

அகஸ்தியா் அருவியில் குளிக்கத் தடை

பாபநாசம் அகஸ்தியா்அருவியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.இதுகுறித்து வனத் துறையினா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முண்டந்துறை வனச்சரகத்தில்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் பத்மநாபமங்கலத்தைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொள்ளை சம... மேலும் பார்க்க

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் நாளை மின் தடை

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஜூலை 3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, காரையாறு, சோ்வல... மேலும் பார்க்க

கருத்தப்பிள்ளையூரில் உணவக உரிமையாளா் தற்கொலை

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரில் உணவக உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கருத்தப்பிள்ளையூா், இந்திரா காலனியை சோ்ந்தவா் சலேத் ராஜா (38). அதே பகுதியில் சிறிய... மேலும் பார்க்க

நெல்லையில் மீட்கப்பட்ட பிகாரை சோ்ந்தவா் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த ஆட்சியா்

பிகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவா் திருநெல்வேலியில் மீட்கப்பட்ட நிலையில், அவரை குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் புதிய ... மேலும் பார்க்க