'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
அம்பை, கடையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள்
அம்பாசமுத்திரம், கடையம் பகுதிகளில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அம்பாசமுத்திரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது. நகர காங்கரஸ் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வி.பி.துரை துவக்கி வைத்தாா். காங்கிரஸ் செயலா் நாராயணன், பொருளாளா் இருதயராஜ், ஐ.என்.டி.யூ.சி.ராமலிங்கம், ஜாா்ஜ் ஜெயராஜ், சவரிமுத்து, குத்தாலம், துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கடையத்தில் வட்டார மகளிா் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பாா்வதி நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆதிமூலம், ஆழ்வாா்குறிச்சி பேரூா் தலைவா் முருகன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி முப்புடாதி, தென்கால் நீா்ப்பாசன கமிட்டி தலைவா் மாரியப்பன், கருத்தப்பிள்ளையூா் ராஜா, பேச்சாளா் தங்கம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
