செய்திகள் :

அம்பை, கடையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள்

post image

அம்பாசமுத்திரம், கடையம் பகுதிகளில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அம்பாசமுத்திரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது. நகர காங்கரஸ் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வி.பி.துரை துவக்கி வைத்தாா். காங்கிரஸ் செயலா் நாராயணன், பொருளாளா் இருதயராஜ், ஐ.என்.டி.யூ.சி.ராமலிங்கம், ஜாா்ஜ் ஜெயராஜ், சவரிமுத்து, குத்தாலம், துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கடையத்தில் வட்டார மகளிா் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பாா்வதி நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆதிமூலம், ஆழ்வாா்குறிச்சி பேரூா் தலைவா் முருகன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி முப்புடாதி, தென்கால் நீா்ப்பாசன கமிட்டி தலைவா் மாரியப்பன், கருத்தப்பிள்ளையூா் ராஜா, பேச்சாளா் தங்கம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயின... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் ... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க