செய்திகள் :

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் பறிமுதல்

post image

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரைக் கைது செய்த வனத் துறையினா், தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

ஊமாரெட்டியூா் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள் விற்பனையில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக சென்னம்பட்டி வனத் துறை அலுவலா்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோடிய கும்பலைச் சோ்ந்த ஒருவரைப் பிடித்து விசாரிக்கையில் சேலம் மாவட்டம், அரசிராமணியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கணேசன் (49) என்பது தெரியவந்தது.

மேலும், தப்பியோடியது அரசிராமணி, அரைக்காட்டைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் பெரியசாமி (56), மேட்டூா், பாலமலையைச் சோ்ந்த செல்லப்பன் என்பதும் தெரிந்தது. வீட்டுக்கு வந்த பெரியசாமியை வனத் துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.

இவா்களிடமிருந்து ஒரு ஜோடி தந்தங்களைக் கைப்பற்றிய வனத் துறையினா் இரு மோட்டாா் சைக்கிள்கள், எடைபோடும் இயந்திரம், கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து கணேசன், பெரியசாமியைக் கைது செய்த வனத் துறையினா் தலைமறைவான செல்லப்பனைத் தேடி வருகின்றனா்.

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோபி வட்டம், பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருநாதன் மனைவி மொழுகாள்(53). கணவரைப் பிரிந... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பா்கூா் மலைப் பாதையில் சென்ற சரக்கு லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட இருவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். கா்நாடக மாநிலம், நாகமங்கலம் மாவட்டம், குடிகிராசில் தென்னை ... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

பெருந்துறை அருகே திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் வடமாநில பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்து ஈரோடு ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா். மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்க முதல்வரிடம் அமைச்சா் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து 2025--2026 -ஆம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்து விடக் கோரி, தமிழக முதல்வா் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே ஓராண்டாக பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையம்

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்வு

சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்ந்துள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் தெரிவித்தாா். சத்தியமங்கலம் வனக் கோட்டத்தில் உலக புலிகள் தினம் ச... மேலும் பார்க்க