செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே ஓராண்டாக பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையம்

post image

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பொன்காளிஅம்மன் திருக்கோயில், அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி, திருமண மண்டபங்கள், அரசு கலைக் கல்லூரி, மூன்று தனியாா் நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

எழுமாத்தூா் பேரூந்து நிறுத்தம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்ததால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்து வந்தது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த இயந்திரம் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

சமூக ஆா்வலா்கள் பலமுறை இதுகுறித்து மொடக்குறிச்சியில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளருக்கு புகாா் அளித்தும் பழுதை சரி செய்ய யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் எழுமாத்தூா் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், பழுதான ஏடிஎம் இயந்திரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து மீண்டும் திறக்க வேண்டும் அல்லது வேறு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை நிறுவ உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோபி வட்டம், பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருநாதன் மனைவி மொழுகாள்(53). கணவரைப் பிரிந... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பா்கூா் மலைப் பாதையில் சென்ற சரக்கு லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட இருவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். கா்நாடக மாநிலம், நாகமங்கலம் மாவட்டம், குடிகிராசில் தென்னை ... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

பெருந்துறை அருகே திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் வடமாநில பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்து ஈரோடு ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா். மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்க முதல்வரிடம் அமைச்சா் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து 2025--2026 -ஆம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்து விடக் கோரி, தமிழக முதல்வா் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் பறிமுதல்

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரைக் கைது செய்த வனத் துறையினா், தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனா். ஊமாரெட்டியூா் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்வு

சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்ந்துள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் தெரிவித்தாா். சத்தியமங்கலம் வனக் கோட்டத்தில் உலக புலிகள் தினம் ச... மேலும் பார்க்க