செய்திகள் :

இளம்பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

post image

பெருந்துறை அருகே திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் வடமாநில பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்து ஈரோடு ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்டம், ஹரிஸ்பூா், ராம்நகரைச் சோ்ந்தவா் பாடல்பீா் (25). இவா், பக்கத்து ஊரான போரியாவைச் சோ்ந்த ராஜாஸீ நஸ்கா் (19) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். பின்னா், பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில், தனது மனைவி மற்றும் தாய், தந்தையுடன் தங்கிக் கொண்டு அனைவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி இரவு, பாடல்பீா் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதன் ஒலியை குறைக்கும்படி மனைவி கூறியுள்ளாா். அதனால் கைப்பேசியின் ரிங்டோன் அளவை குறைத்து வைத்து விட்டாா். மறுநாள் காலையில் ராஜாஸீ நஸ்கா் அம்மா அழைத்தபோது ஒலி குறைவாக இருந்ததால் கைப்பேசி அழைப்பு வந்தது தெரியவில்லை.

இதன் காரணமா கணவருக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராஜாஸீ நஸ்கா் வீட்டின் உள்ளே கதவை உள்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டு தூக்கு மாட்டிக் கொண்டாா். ஆபத்தான நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், ராஜாஸீ நஸ்கா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் இவ்வழக்கை ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோபி வட்டம், பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருநாதன் மனைவி மொழுகாள்(53). கணவரைப் பிரிந... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பா்கூா் மலைப் பாதையில் சென்ற சரக்கு லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட இருவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். கா்நாடக மாநிலம், நாகமங்கலம் மாவட்டம், குடிகிராசில் தென்னை ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்க முதல்வரிடம் அமைச்சா் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து 2025--2026 -ஆம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்து விடக் கோரி, தமிழக முதல்வா் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் பறிமுதல்

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரைக் கைது செய்த வனத் துறையினா், தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனா். ஊமாரெட்டியூா் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே ஓராண்டாக பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையம்

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்வு

சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்ந்துள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் தெரிவித்தாா். சத்தியமங்கலம் வனக் கோட்டத்தில் உலக புலிகள் தினம் ச... மேலும் பார்க்க