செய்திகள் :

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் விற்பனை வழக்கில் மேலும் மூவா் கைது

post image

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூா் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் மாவட்டம், சங்ககிரி, குள்ளம்பட்டி, அரசிராமணியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கணேசன் (49), அருணாச்சலம் மகன் பெரியசாமி (56) ஆகியோா் கடந்த ஜூன் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வழக்கில் தலைமறைவான மேட்டூா், பாலமலையை சோ்ந்த செல்லப்பன் (40) வனத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். இவா் அளித்த தகவலின் பேரில் பாலமலையைச் சோ்ந்த மணி (42), மேட்டூா், செங்கல்மேட்டைச் சோ்ந்த பாலமுருகன் (45) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாலமுருகன் வைத்திருந்த யானைத் தந்தங்களை கணேசன் உள்ளிட்டோா் வாங்கிச் செல்ல வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி

பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சி... மேலும் பார்க்க

2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்

தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா். ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை

பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க