செய்திகள் :

அம்மாபேட்டையில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

post image

அம்மாபேட்டையில் 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாபேட்டை பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து செயல் அலுவலா் எஸ்.சதாசிவம் தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுதா்சன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் சி.ஜெகதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சுந்தராம்பாளையம், ஊமாரெட்டியூா், லட்சுமிபுரம் பகுதிகளில் மளிகைக் கடை, உணவகம் மற்றும் இறைச்சிக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 9 கடைகளுக்கு ரூ.6,200 அபராதம் விதிக்கப்பட்டது.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க