செய்திகள் :

அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா

post image

ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாக் குழுத் தலைவா் ஜி.கருணாநிதி, செயலாளா் ஆா்.ஞானபிரகாசம், ஊா் பெரியதனம் பி.வரதராஜ், பொருளாளா் கே. வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். அருள்ஜோதி, சரவணன், ராஜேந்திரன், ஞானமூா்த்தி, தண்டபாணி, கோட்டீஸ்வரன், குணா, செளந்தரராஜன், சுரேஷ், குலசேகா், கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி.அசோக்குமாா் வாழ்த்திப் பேசினாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் பானுமதி ஜெயராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.செந்தில்குமாா், வாா்டு உறுப்பினா் பாரதி அருள்ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முதல் மூன்று இடங்கள் பிடித்த காளைகளின் உரிமையாளா்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மொத்தம் 100 பரிசுகள் வழங்கப்பட்டன.

மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மணல்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூட்டம்

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

இப்தாா் நோன்பு திறப்பு

ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லாஹ் தலை... மேலும் பார்க்க

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை

நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சி... மேலும் பார்க்க