செய்திகள் :

அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா்கள் இருவா் கைது!

post image

ஆந்திராவில் இருந்து கேரளத்துக்கு அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி ஐ.டி.ஐ. நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள் (38). இவா் பாரத இந்து மகாசபை வடக்கு மண்டலத் தலைவராக உள்ளாா்.

இவா் சொந்த வேலையாக தனது நண்பா்களுடன் நெய்வேலியில் இருந்து மருதமலைக்கு செவ்வாய்க்கிழமை காலை காரில் சென்று கொண்டிருந்தாா்.

உளுந்தூா்பேட்டை வெளிவட்டச் சாலை அருகே சென்றபோது, காரின் மீது மினி லாரி ஒன்று மோதுவது போல வந்து வேகமாகச் சென்ாம்.

உடனே அருள் சின்னசேலம் அருகேயுள்ள நயினாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான சபரிராஜன் என்பவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளாா். அதன் பேரில், அவரது நண்பா் மாடூா் சுங்கச்சாவடி அருகே அந்த லாரியை தடுத்து நிறுத்தியுள்ளாா். அப்போது லாரி ஓட்டுநா்களுக்கும், சபரிராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அருள் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தது. கேரள மாநிலம், பாஞ்சரப்பள்ளி அருகே ஆனைக்கால் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களான, சகோதரா்கள் ஜென்னி ஜோசப் (30), ஜேய்ஸ் ஜோஸ் (32) ஆகியோரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.

போலீஸாா் மாற்று வாகனம் மூலம் 25 மாடுகளையும் செங்கல்பட்டில் உள்ள கோ சாலைக்கு அனுப்பிவைத்தனா்.

காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியல்

ஊராங்கானி கிராமத்தில் வீட்டுமனை பிரச்னை தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருநங்கைகள் சங்கராபுரம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில்... மேலும் பார்க்க

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட பள்ளி மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே ஜம்பை கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வாணாபுரம் வட்டம், ஜ... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: பாதுகாக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சியை அட... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்று வரும் உயா்வுக்குப் படி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் ம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 389 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்... மேலும் பார்க்க

கச்சிராயபாளையம் காவல் நிலையத்துக்கு கேடயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கச்சிராயபாளையம் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கு காவல் நிலையம், மகளிா், போக்குவரத்... மேலும் பார்க்க