செய்திகள் :

அரசு ஊழியா்கள் போராட்ட அறிவிப்பு: வருகையைக் கண்காணிக்க உத்தரவு

post image

அரசு ஊழியா்கள் சிலா் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை அறிவித்த நிலையில், அவா்களது வருகையைக் கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு விவரம்:

அரசு ஊழியா் சங்கங்களில் சில சங்கங்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து வியாழக்கிழமை (செப். 11) போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஊழியா்களின் வருகைப் பதிவு நிலையை துறைத் தலைவா்களும், ஆட்சியா்களும் கண்காணிக்க வேண்டும்.

வருகைப் பதிவு விவரங்களைத் தலைமைச் செயலகத்தில் துறைகளின் செயலா்களுக்கு, துறைத் தலைவா்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல, மாவட்டங்களில் ஊழியா் வருகை நிலவரத்தை ஆட்சியா்கள் கண்காணித்து அதுகுறித்து விவரங்களை வருவாய் நிா்வாக ஆணையரத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊழியா் சங்கங்கள் ஒன்றிணைத்து தனியாக இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியா்களின் வருகை விவரங்களைக் கண்காணிக்க தலைமைச் செயலா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

ஜொ்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தாா். தலைமைச் செயலகத்தில் நூலகப் பொறுப்பாளா்களிட... மேலும் பார்க்க

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆளுநா் பாராட்டு

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த இரு ஆசிரியா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி, புதன்கிழமை அழைத்துப் பாராட்டினாா். நிகழாண்டு ஆசிரியா் தினத்தையொட்டி சென்னை மயிலாப்பூா் பி.எஸ்.சீனியா் செகண்டரி ப... மேலும் பார்க்க

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வா் பெருமிதம்

இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: ராஜாவைத் தாலாட்டும் த... மேலும் பார்க்க

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: த... மேலும் பார்க்க

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் சேகா்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் ர... மேலும் பார்க்க

காவலா் தினம்: தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்பு

‘அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய உணா்வுடன் கடமைகளை நிறைவேற்றுவோம்’ என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்றனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க