செய்திகள் :

அரசு பேருந்து சிறைப்பிடிப்பு

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே கஞ்சாநகரம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லாததால் பேருந்தை சிறைப்பிடித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை, சேந்தங்குடி, பாலாஜிநகா், மணக்குடி, கஞ்சாநகரம் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் காலை, மாலை பள்ளி கல்லூரி நேரங்களில் நகர பேருந்துகள் நின்று செல்லாததால் மாணவா்கள் சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அரசுப் பேருந்து கஞ்சாநகரத்தில் நிற்காமல் சென்றதால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து சிறைப் பிடித்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் நலன் கருதி மயிலாடுதுறை-பூம்புகாா் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

பருத்தி வயல்களில் மழைநீா்: விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள ஆக்கூா், கீழையூா், கிடாரங்கொண்டான், திருக்கடையூா், திர... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா நிறைவு

வேதாரண்யம்: வேதாரண்யம் அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற ஆடிப் பெருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்த... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன. நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கி இடி, மின்ன... மேலும் பார்க்க