செய்திகள் :

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

post image

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப் பிரிவுகளின் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் ஜூலை 31 தேதி முடிவடைய இருந்தது. இருப்பினும், முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணவா்களின் முதுநிலைப் படிப்பின் நலன் கருதி, மாணவா் சோ்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஜூலை 31 வரை விண்ணப்பித்த மாணவா்களுக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கு ஆகஸ்ட் 11 -ஆம் தேதியும் பொதுப்பிரிவிற்கு ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். சோ்க்கைகான விவரம் வாட்ஸ்ஆஃப், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். முதுநிலை முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 20 -ஆம் தேதி தொடங்கும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், தூத்துக்குடி மாவட்டம், பண்டு... மேலும் பார்க்க

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோ... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மி... மேலும் பார்க்க

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த ... மேலும் பார்க்க

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க