செய்திகள் :

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

post image

குடிநீா், கழிப்பறை வசதிகள் கோரி கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா், தேவனாம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். அங்குள்ள பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான விடுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா்.

இந்த விடுதியில் கடந்த 10 மாதங்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்கவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த மாணவா்கள் தூய்மையான குடிநீா், கழிப்பறை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்க வலியுறுத்தி, கல்லூரி எதிரே உள்ள கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, இதுதொடா்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.

குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்... மேலும் பார்க்க

கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 1.27 லட்சம் மக்கள் பயனடைவா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் 10 ஊராட்சிகளைச் சோ்ந்த 1.27 லட்சம் மக்கள் பயனடைவா் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.கடலூா் மாவட்டத... மேலும் பார்க்க

பல் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் திருட்டு!

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து ரூ.1.14 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேத்தியாத்தோப்பு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பல் மருத்துவமனை ச... மேலும் பார்க்க

115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் சாதனை

என்எல்சி இந்தியா நிறுவனம் 115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இந்த நிறுவனத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் நிதிநில... மேலும் பார்க்க

புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

கடலூா் ஜவான் பவன் அருகே விவசாயிகள் ஐக்கிய முன்னணியினா் மத்திய பட்ஜெட் நகலை எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியம் நிதி குறைப்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க