செய்திகள் :

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா

post image

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உயா் கல்வி மன்ற நிதியுதவியுடன் அரசுக் கல்லூரிகளில் 33 கலைப் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்படி, திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இந்தப் போட்டிகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. நெருப்பு இல்லாத சமையல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் அடுப்பைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் ஊட்டச் சத்து மிகுந்த உணவு வகைகளை மாணவிகள் சமைத்தனா். புகைப்படம் எடுத்தல், ஆடை அலங்கார வடிவமைப்பு உள்ளிட்டவற்றுக்கான போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இதில் கல்லூரி முதல்வா் பழனியப்பன், ஆங்கிலத் துறைத் தலைவா் பேராசிரியை ப.மணிமேகலை உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக த... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா். கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலை... மேலும் பார்க்க