செய்திகள் :

அரசுத் திட்டங்கள் குறித்து விமா்சனம்: தலைமையாசிரியை பணியிட மாற்றம்

post image

வாணியம்பாடி: தமிழக அரசையும், பள்ளி கல்வித்துறை நலத்திட்டங்களை விமா்சித்து கைப்பேசியில் பேசிய தலைமையாசிரியை பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சி.எஸ்.அமுதா. இவா் மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கே.ஜெயலட்சுமி என்பவரிடம் கைப்பேசியில் பேசிய ஆடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் தமிழக அரசையும், பள்ளிகல்வித் துறை திட்டங்களையும், கல்லூரி கனவு திட்டம் குறித்தும் விமா்சித்தும் பேசினாராம்.

இதுகுறித்து திருப்பத்தூா் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி விசாரணை நடத்தி பள்ளி கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பி வைத்திருந்தாா். இதனையடுத்து நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை அமுதாவை கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் பெளா்ணமி பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிவார மூா்த்திகளுக்கு சி... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் மேம்பாலப் பணி தொடக்கம்

நாட்டறம்பள்ளி காணாறு குறுக்கே ரூ.1 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் குடிநீா் திட்ட அபிவ... மேலும் பார்க்க

ரூ.2.80 கோடி பள்ளி கட்டடங்கள்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

ஆம்பூரில் ரூ.2.80 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, புதுகோவிந்தாபுரம் நகராட்சி நடு... மேலும் பார்க்க

576 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 576 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தமிழ்நாட... மேலும் பார்க்க

கருட சேவை உற்சவம்

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை புதன்கிழமை நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவா் கருட வாகனத்தில்... மேலும் பார்க்க

நோ்மை தவறாத ஆட்டோ ஓட்டுநா்: வழியில் கிடைத்த ரூ.20,000 ஒப்படைப்பு

வாணியம்பாடியில் சாலையில் பெண் தவற விட்ட ரூ.20,000 ரொக்கத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் பாராட்டப்பட்டாா். வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ். இந்ந... மேலும் பார்க்க