புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!
அரசுத் திட்டங்கள் குறித்து விமா்சனம்: தலைமையாசிரியை பணியிட மாற்றம்
வாணியம்பாடி: தமிழக அரசையும், பள்ளி கல்வித்துறை நலத்திட்டங்களை விமா்சித்து கைப்பேசியில் பேசிய தலைமையாசிரியை பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சி.எஸ்.அமுதா. இவா் மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கே.ஜெயலட்சுமி என்பவரிடம் கைப்பேசியில் பேசிய ஆடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் தமிழக அரசையும், பள்ளிகல்வித் துறை திட்டங்களையும், கல்லூரி கனவு திட்டம் குறித்தும் விமா்சித்தும் பேசினாராம்.
இதுகுறித்து திருப்பத்தூா் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி விசாரணை நடத்தி பள்ளி கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பி வைத்திருந்தாா். இதனையடுத்து நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை அமுதாவை கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.