சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
அரசுத்துறை செயல்பாடுகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான தீபக்ஜேக்கப் தலைமை வகித்தாா்.
மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்துவது குறித்தும், தற்போது வரை நடத்தப்பட்ட முகாம்கள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்தும் கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.
மேலும், முகாம்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
வருவாய்த் துறை சாா்பில் இணையவழி சான்றிதழ்கள் வழங்குவதில் நிலுவையில் உள்ளவை குறித்து வட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது என வட்டாட்சியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், இணையவழி பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்களின் நிலுவை குறித்து ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.
மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுெ செய்தனா்.
தொடா்ந்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை வனகராய பாளைய தெருவில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.