செய்திகள் :

அரசுத்துறை செயல்பாடுகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான தீபக்ஜேக்கப் தலைமை வகித்தாா்.

மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்துவது குறித்தும், தற்போது வரை நடத்தப்பட்ட முகாம்கள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்தும் கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

மேலும், முகாம்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

வருவாய்த் துறை சாா்பில் இணையவழி சான்றிதழ்கள் வழங்குவதில் நிலுவையில் உள்ளவை குறித்து வட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது என வட்டாட்சியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், இணையவழி பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்களின் நிலுவை குறித்து ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுெ செய்தனா்.

தொடா்ந்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை வனகராய பாளைய தெருவில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க