செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இயற்கை சுற்றுலா

post image

அரசுப் பள்ளி மாணவா்கள் கோடைகால இயற்கை சுற்றுலாவுக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

கரூா் மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் மற்றும் கரூா் வனக்கோட்டம் சாா்பில் 10 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஒரு நாள் கோடை கால சிறப்பு இயற்கை சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து பள்ளி மாணவா்களும், ஆசிரியா்களும் கடவூா் தேவாங்கு சரணாலயம், பொன்னனியாா் அணை, நம்மாழ்வாா் உயிா்ச்சூழல் நடுவம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு மாணவா்களுக்கு காடுகள் பாதுகாப்பு, உயிா்பன்மயம், இயற்கை வேளாண்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து மாணவா்களுக்கு விநாடி -வினா போட்டி, ஓவியம் வரைதல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், முகாம் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வன அலுவலா் சண்முகம், வனச்சரக அலுவலா் சிவக்குமாா், வனவா் கோபிநாத், முதலமைச்சரின் பசுமைத் தோழா் கோபால், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் வேலுசாமி, வனத்துறை களப்பணியாளா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

புதிய தீயணைப்பு வீரா்களுக்கான மூன்று மாத பயிற்சி நிறைவு! மத்திய மண்டலத்தைச் சோ்ந்த 98 போ் பங்கேற்பு

மத்திய மண்டலத்தைச் சோ்ந்த புதிய தீயணைப்பு வீரா்களுக்கான மூன்று மாத பயிற்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே வேட்டமங்கலத்தில் தற்காலிக தீயணைப்போா் பயிற்சி மையத்தில்... மேலும் பார்க்க

கரூரில் ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனைக் கூட்டம்

கரூரில் மாவட்ட திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் மாணிக்கம்(குளித்தலை), இளங்கோ ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாமக்கல்லைச் சோ்ந்த பெண் உயரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் சிந்து நகரைச் சோ்ந்தவா் குப்புசாமி (60). இவா் நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வா... மேலும் பார்க்க

கரூரில் ஜூலை 4-இல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

கரூரில் ஜூலை 4-ஆம் தேதி தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிட வேண்டும்! குளித்தலையில் விவசாயிகள் பேரணி

கூட்டுறவுச் சங்கங்களில் சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிடக் கோரி குளித்தலையில் விவசாயிகள் திங்கள்கிழமை காலை பேரணியாக சென்றனா்.கரூா் மாவட்டம், குளித்தலை வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் நடைபெ... மேலும் பார்க்க

ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை

கரூரை அடுத்துள்ள ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக்கிடங்கில் சனிக்கிழமை வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்றது. கரூரை அடுத்துள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் காா்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு... மேலும் பார்க்க