செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை எட்டியது! - அன்பில் மகேஸ் பெருமிதம்

post image

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மாணவர் சேர்க்கை 3 இலட்சத்து 94 ஆயிரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!" என்று பதிவிட்டுள்ளார்.

TN School Education Minister Anbil Mahesh has proudly announced that student enrollment in government schools in Tamil Nadu has reached 4 lakhs.

இதையும் படிக்க | திருச்சியில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் இபிஎஸ்?

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்– பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ந... மேலும் பார்க்க

100 நாள் நடைப்பயணம்... திருப்போரூரில் இருந்து தொடங்கினார் அன்புமணி!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 100 நாள்கள் நடைப்பயணத்தை திருப்போரூரில் இருந்து இன்று(ஜூலை 25) தொடங்கியுள்ளார்.திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ’நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இர... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர், கும்... மேலும் பார்க்க