செய்திகள் :

அரசுப் பள்ளிக் கட்டடத்தில் இளம்பெண்ணுடன் இரவில் தங்கிய போதை இளைஞர்! - திருச்சி அதிர்ச்சி

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள கட்டடத்தில் மதுபோதையில் ஒரு பெண்ணுடன் இளைஞர் இருந்துள்ளார். இதை அறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுக்க சென்றபோது, 'மது போதையில் நள்ளிரவு இங்கு வந்து படுத்திருந்தோம். இப்போது செல்கிறோம். நாங்கள் இங்கு வந்தது என்ன தவறு?' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். 

jodi

மேலும், `பள்ளியில் நள்ளிரவில் படுத்துவிட்டு செல்வதற்கு இது விடுதியா? ' என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, 'உங்களுக்கு என்ன பிரச்னை?' என மிரட்டி உள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. `நள்ளிரவில் பள்ளிக்குள் வந்து இருவரும் ஒன்றாக உறங்கினோம். தற்போது நாங்கள் கிளம்புகிறோம்' என மிரட்டிய சம்பவம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: `பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம்'- `பகீர்' கிளப்பும் ரூ.24 கோடி மோசடி!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் எனக் கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர் குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

தனிமையில் நெருக்கம்... வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்கும்படி மிரட்டிய டாக்சி டிரைவரை கொன்ற காதல் ஜோடி

பஞ்சாப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை தேடி மும்பை வந்திருக்கிறார். அவர் நவிமும்பை உல்வே பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கம்பெனிக்கு செல்ல சுரேந்திர பாண்டே என்பவரின் ஓலா டாக்சியை ... மேலும் பார்க்க

தென்காசி அருகே காரில் கஞ்சா கடத்தல்; பிரபல கஞ்சா ரவுடி கைது!

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் ம... மேலும் பார்க்க

ராஜபாளையம்: `9-ம்வகுப்பு மாணவர் தூக்கிட்டு மரணம்' - போலீஸார் விசாரணை!

ராஜபாளையத்தில் 9-ம்வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் தெருவைச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும் இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்... மேலும் பார்க்க

தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது: 29). இவர், மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குளவாய்ப... மேலும் பார்க்க