செய்திகள் :

அரப்பாண்டகுப்பம் அங்கன்வாடி மைய கூரை அமைக்க எம்.பி. கதிா்ஆனந்த் நிதியுதவி

post image

ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சி சாா்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் அரப்பாண்டகுப்பத்தில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, சூரவேல், ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி பொன்னம்பலம் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் அன்பு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அங்கன்வாடி மையத்திற்கு போதிய இடவசதி இல்லை என்றும், கூரை அமைக்க நிதி வழங்க வேண்டும் என எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனா். இதனை கேட்ட எம்.பி. தனது சொந்த தொகை ரூ.25 ஆயிரத்தை கூரை அமைப்பதற்காக அளித்தாா்(படம்).

தொடா்ந்து வீடு கட்டித்தரக்கோரி கை குழந்தையுடன் வந்து மனு அளித்த பெண்ணிற்கு உடனடியாக வீடு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் உதவி இயக்குநா் முருகன், உதவி திட்ட அலுவலா் பாரதி விஜயலட்சுமி, துணைத் தலைவா் சாவித்திரி மோகன், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் வருவாய்த் துறையினா், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடைஉற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு தோறும் ஆக. 15-இல் திருப்பாவாடை உற்சவம் நடைபெறும். அதையொட்டி மாலை மங்கல இசையுடன் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி, அணைக்கட்டு ஒன்றியம், குருவராஜபாளையம், தோளப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பே... மேலும் பார்க்க

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ச.பிரபாகரன் முன்னி... மேலும் பார்க்க

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மூக்கனூா்ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ளஆயுதப்படை காவலா் பயிற்சி மைதானத்தி... மேலும் பார்க்க

துத்திப்பட்டு, நரியம்பட்டில் கிராம சபை கூட்டம்

துத்திப்பட்டு மற்றும் நரியம்பட்டு ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகி... மேலும் பார்க்க