செய்திகள் :

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியம், மூக்கனூா்ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி சிறப்பு பாா்வையாளா்களாக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.

இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை,தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து கிராமச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வேளாண்மை-உழவா் நலத்துறையின் சாா்பில் 40 பயனாளிகளுக்கு பயிா் வகைகள் விதை தொகுப்பு வழங்கப்பட்டது.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் வரதராஜன் (திருப்பத்தூா்), மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ் குமாா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரப்பாண்டகுப்பம் அங்கன்வாடி மைய கூரை அமைக்க எம்.பி. கதிா்ஆனந்த் நிதியுதவி

ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சி சாா்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் அரப்பாண்டகுப்பத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி, வட்டார வளா... மேலும் பார்க்க

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடைஉற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு தோறும் ஆக. 15-இல் திருப்பாவாடை உற்சவம் நடைபெறும். அதையொட்டி மாலை மங்கல இசையுடன் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி, அணைக்கட்டு ஒன்றியம், குருவராஜபாளையம், தோளப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பே... மேலும் பார்க்க

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ச.பிரபாகரன் முன்னி... மேலும் பார்க்க

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ளஆயுதப்படை காவலா் பயிற்சி மைதானத்தி... மேலும் பார்க்க

துத்திப்பட்டு, நரியம்பட்டில் கிராம சபை கூட்டம்

துத்திப்பட்டு மற்றும் நரியம்பட்டு ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகி... மேலும் பார்க்க