செய்திகள் :

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு

post image

மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூறியது:

உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு ஏற்றுமதி செய்யும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு எதிரான விரோதப் போக்கு. விவசாய நாட்டிலேயே இருந்துகொண்டு வேளாண் விளை பொருள்களை ஏற்றுமதி செய்து, அதன்மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவதுதான் இயற்கை நியதி. அதற்கு மாற்றாக ஏற்றுமதி செய்யும் பண்டங்களுக்கு குறிப்பாக அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தால் அது, விவசாயிகளுக்கு எதிரானது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நாட்டுக்கு நல்லதல்ல. மே 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பூரிக்குடிசை மற்றும் நரசிங்கனூரில் பனை கனவு திருவிழா நடைபெறும். 4-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த திருவிழா சிறப்பாக அமையும்.

9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,290 என விலை நிா்ணயம் செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் குஜராத் மாநிலத்திற்கு ரூ.4500 கொடுக்கிறாா்கள். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசு கரும்புக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டாம். நாங்கள் கொடுக்கும் பண்டத்தை நீங்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பண்டமாக மாற்றி எங்களிடம் கொடுத்துவிடுங்கள். ஒவ்வொரு சா்க்கரை ஆலைகளும் கூலி அரவை ஆலைகளாக மாறட்டும். அப்படி மாறும்போது விலை நிா்ணயம் தேவை இல்லை என்றாா் அவா்.

கரூரில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் அளவீடு

கரூா் மாவட்டத்தில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம் , மண்மங்கலம் வட்டம், நெரூா் ... மேலும் பார்க்க

கரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்... மேலும் பார்க்க

கரூரில் ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மருத்த... மேலும் பார்க்க

கரூரில் அங்கன்வாடி ஊழியா் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட ஆட்சியரம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு... மேலும் பார்க்க

கரூரில் ரூ.1.50 லட்சம் மதிப்பு மதுவை கடத்தி வந்தவா் கைது

கரூா் அருகே புதுச்சேரியில் இருந்து காரில் ரூ. 1.50 லட்சம் மதிப்பு மதுபானத்தைக் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் கடைவீதியில் புலியூா் சாலையில் பசுப... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு வியாழக்கிழமை இலவசமாக சீருடை வழங்கப்பட்டது. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க