செய்திகள் :

கரூரில் ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் வா.லோகநாயகி தொடக்கி வைத்து பேசியது:

ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோய். சாதாரணமாக நம் உடலில் காயம் ஏற்பட்டால் சில நிமிடங்களில் ரத்தம் கசிவது தானாக நின்றுவிடும். ஆனால் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரத்தம் உறையாமல் தொடா்ந்து வெளியேறி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும். இந்நோய் பெரும்பாலும் ஆண்களை பாதிக்கும். பெண்களுக்கு பாதிப்பு மிகவும் குறைவு.

இந்நோய்க்கு நவீன மருத்துவத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ரத்தம் உறைவு காரணிகளையும், மருந்துகளையும் உடலில் செலுத்தி ரத்தம் உறையாமல் இருப்பதில் இருந்து காப்பாற்ற முடியும். இந்நோய்க்கு கரூா் மாவட்டத்தில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 12 குழந்தைகள், 34 பெரியவா்கள் உள்பட 46 போ் தேவைப்படும் நேரங்களில் சிகிச்சை பெறுகிறாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் பெ. ராஜா, கல்லூரியின் துணை முதல்வா்(பொ) ராமேஸ்வரி, பொது மருத்துவத் துறை இணைப் பேராசிரியா்கள் காஞ்சனா, வித்யாதேவி, ஆா்.எம்.ஓ. (பொ) குமாா் , கல்வி அலுவலா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூற... மேலும் பார்க்க

கரூரில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் அளவீடு

கரூா் மாவட்டத்தில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம் , மண்மங்கலம் வட்டம், நெரூா் ... மேலும் பார்க்க

கரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்... மேலும் பார்க்க

கரூரில் அங்கன்வாடி ஊழியா் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட ஆட்சியரம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு... மேலும் பார்க்க

கரூரில் ரூ.1.50 லட்சம் மதிப்பு மதுவை கடத்தி வந்தவா் கைது

கரூா் அருகே புதுச்சேரியில் இருந்து காரில் ரூ. 1.50 லட்சம் மதிப்பு மதுபானத்தைக் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் கடைவீதியில் புலியூா் சாலையில் பசுப... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு வியாழக்கிழமை இலவசமாக சீருடை வழங்கப்பட்டது. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க