செய்திகள் :

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேமுதிக வலியுறுத்தல்

post image

அரியலூா்: அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் தோ்தலில் தேமுதிக கூட்டணி வெற்றிபெற்றவுடன் கட்டப்படும் என கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் அவா் திங்கள்கிழமை அரியலூா் சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நடந்தும், வாகனத்தில் நின்ற வாறும் மக்களைச் சந்தித்தாா்.

தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகே அவா் பேசியது: அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அரியலூா் நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்.

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும். இல்லையெனில், தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தோ்தலில் வெற்றிபெறும். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட அனைத்துப் பணிகளையும் செய்வோம். மேலும், அரியலூரில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இங்குள்ள சிமென்ட் ஆலைகளில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தப்படும். எனவே, தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து,கீழப்பழுவூா், ஏலாக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

பிரசாரத்தின் போது, அக்கட்சியின் பொருளாளா் சுதீஷ், மாவட்டச் செயலா்கள் அரியலூா் ராம.ஜெயவேல், பெரம்பலூா் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு... மேலும் பார்க்க

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க