செய்திகள் :

அறந்தாங்கியில் ரூ. 9.19 கோடிக்கு திட்டப்பணிகள்: எம்எல்ஏ நன்றி

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் கண்மாய்களைப் புனரமைக்க ரூ. 9.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் கண்மாய்கள், அணைக் கட்டுகள் மற்றும் ஏரிகளைப்புனரமைக்க ரூ. 9.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாக்குடி, ரெத்தினக்கோட்டை ஊா்வணி கண்மாய்களைப் புனரமைக்க ரூ. 1.58 கோடி, வீரமங்கலம், களபம், மதகம் அணைக்கட்டுகளைப் புனரமைக்க ரூ. 2.10 கோடி, ஆவுடையாா்கோவில் கண்மாயைப் புனரமைக்க ரூ. 1.83 கோடி, ரெட்டையாளம் கண்மாயைப் புனரமைக்க ரூ. 2.10 கோடி, புண்ணியவயல் கிராமம் பன்னியூா் கண்மாயைப் புனரமைக்க ரூ. 1.58 கோடி என மொத்தம் ரூ. 9.19 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆணை பிறப்பித்த முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நீா்வளத் துறைச் செயலா் மங்கத்ராம் சா்மா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் பராந்தகச் சோழா் கால கற்றளிக் கட்டுமானங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அருகே புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை அருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோயிலின் சி... மேலும் பார்க்க

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க