செய்திகள் :

அஸ்ஸாம் மாநில பெண் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கரூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

post image

அஸ்ஸாம் மாநில பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அஸ்ஸாம் மாநிலம், டமுள்பூரைச் சோ்ந்த பலெராராம் என்பவரது மனைவி சின்டாமொனி போரோ(44). இவா் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த மூலிமங்கலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தனது மகனுடன் பணியாற்றி வந்தாா். அதே நிறுவனத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சுபோல்முா்மு (32) என்பவரும் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், சுபோல் முா்மு கடந்த ஆண்டு (2024) ஜன.7-ஆம்தேதி இரவு சின்டாமொனிபோராவுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சின்டாமொனிபோராவை சுபோல் முா்மு கழுத்தை இறுக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளா் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் சுபோல்முா்முவை வேலாயுதம்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேலு கொலையாளி சுபோல்முா்முவுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா். இதையடுத்து சுபோல்முா்மு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க