செய்திகள் :

ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில், அமைப்புச் சாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பதிவு பெற்ற அமைப்புச் சாராத் தொழிலாளா்களுக்கும், பதிவு பெறாத

தொழிலாளா்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் நோய்களை கண்டறிந்து அவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம் தளவாய் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆக.2-ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

எனவே, இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளா்கள் கலந்துக் கொள்ளலாம்.

மருத்துவ முகாமுக்கு வரும் பதிவு பெற்ற அமைப்புச்சாராத் தொழிலாளா்கள் மற்றும் பதிவு பெறாத தொழிலாளா்கள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், ஆதாா் அடையாள அட்டை, பதிவு நலவாரிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயத்துக்கான

ஆவணம், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து பயன்பெறலாம்.

பேருந்தில் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஆண்டிமடத்தை அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (32)... மேலும் பார்க்க

வைகோ குறித்து அவதூறு பரப்புவோா் மீது புகாா்

மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. ... மேலும் பார்க்க

அரியலூரில் மருத்துவ முகாம் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து அலு... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளிப் படிப்பு வரை... மேலும் பார்க்க

அரியலூா் அருகே தந்தை, மகனை குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தந்தை, மகனைக் கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூா் தெற்குத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளை... மேலும் பார்க்க