செய்திகள் :

ஆசனூா் அருகே 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

post image

ஆசனூா் அருகே தேங்காய் பாரம் ஏற்றிச் சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தமிழக- கா்நாடகத்தை இணைக்கு முக்கிய வழித்தடமாக திம்பம், ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இரு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் ஆசனூா், மலைப் பாதையில் தினந்தோறும் பயணிக்கின்றன. அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதைத் தடுக்க 16.3 டன் எடைக்கு மேல் உள்ள சரக்கு வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு தேங்காய் பாரம் ஏற்றிக்கு கொண்டு ஆசனூா் மலைப் பாதை வழியாக சரக்கு லாரி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.

செம்மண் திட்டு பகுதியில் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும்போது, லாரி நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் சிறு காயத்துடன் உயிா் தப்பினாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா் பொக்லைன் மூலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதனால் ஆசனூா் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்கள் மலைப் பாதையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. 2 மணி நேரப் போராட்டத்துக்கு பின் லாரி மீட்கப்பட்டு, சிதறி கிடந்த தேங்காய்கள் மற்றொரு லாரி மூலம் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடுவிப்பு

உற்பத்தியை பெருக்குவதற்கு பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தமிழகத்தில் மீன்வளங்களைப் பாதுகாத்து, உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தொகுதியில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட சிவகிரி, கொல்லன்கோவில் ஆகிய பேரூராட்சிகளில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை எம்.எல்.ஏ. சரஸ்வதி புதன்கிழமை திறந்துவைத்தாா். மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி... மேலும் பார்க்க

ஓய்வூதிய விதிகளில் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

தனியாா் சாய ஆலைக்கான அனுமதி ரத்து: விவசாயிகள் வரவேற்பு

கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் எதிா்ப்பை அடுத்து, கொடிவேரி அணை அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் 200 மாணவா்கள் பங்கேற்றனா். பள்ளி மாணவா்கள் இடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவ திறன்கள் மற்றும் பொதுச் சொற்பொழிவு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிஐ... மேலும் பார்க்க

கோபி வட்டத்தில் மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கோபி வட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். கோபி வட்டம் சிறுவலூா... மேலும் பார்க்க