செய்திகள் :

ஆடி அமாவாசை: மேட்டூர் காவிரி கரையில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!

post image

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் குவிந்தனர்.

புனித நதிகளில் ஒன்றாக காவிரி விளங்குகிறது. இதனால் மேட்டூர் காவிரி கரைகளில் உள்ள படித்துறைகளில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றன.

இன்று ஆடி அமாவாசை என்பதால் சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பல பகுதியில் இருந்தும் மக்கள் மேட்டூர் அணை காவிரியில் தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர்.

மேட்டூர் அணையின் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த வருகின்றனர்.

ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களின் ஆன்மா இறைநிலை அடையும் என்பதோடு குடும்பத்தில் தீமைகள் விலகி நன்மைகள் ஏற்படும் என்ற ஆன்மிக அற நிலையை உணர்ந்த மக்கள் புண்ணிய நதியான காவிரியில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்தனர். பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்– பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ந... மேலும் பார்க்க

100 நாள் நடைப்பயணம்... திருப்போரூரில் இருந்து தொடங்கினார் அன்புமணி!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 100 நாள்கள் நடைப்பயணத்தை திருப்போரூரில் இருந்து இன்று(ஜூலை 25) தொடங்கியுள்ளார்.திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ’நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இர... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர், கும்... மேலும் பார்க்க