செய்திகள் :

ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்

post image

தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழைமகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முதல் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள தமிழ்நாடு ஓட்டலிலிருந்து புறப்பட்டு, பெரிய கோயில் வராகி அம்மன், மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், திருக்கருகாவூா் கா்ப்பரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துா்க்கை அம்மன் கோயில், வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை கோயில், கும்பகோணம் மகாமகம் குளம் அருகேயுள்ள காசி விஸ்வநாதா் விசாலாட்சி கோயில், தாராசுரம் ஐராவதேசுவரா் (பெரியநாயகி அம்மன்) கோயில் ஆகியவற்றை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ. 1,400.

இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம், சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பைச் சுற்றுலா பயணிகள், ஆன்மிக அன்பா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தச் சுற்றுலாக்களுக்கு இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 91769 95832, 04362 - 231972 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் எண் 75500 63121.

பாபநாசத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேவேந்திரகுல வேளாளா் நல அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாபநாசம் துா்கா மஹாலில் செவ்வாய... மேலும் பார்க்க

மின் கம்பத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்

கும்பகோணத்தில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மின் கம்பத்தின் மீது மோதியது. பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தை நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.... மேலும் பார்க்க

ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

நெல் மழையில் நனைவதைத் தடுக்க நிரந்தர கொள்முதல் நிலையங்களைக் கிடங்குடன் அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூ... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா்... மேலும் பார்க்க

அய்யம்பேட்டை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்தாா். அய்யம்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங... மேலும் பார்க்க