செய்திகள் :

அய்யம்பேட்டை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்தாா்.

அய்யம்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமிற்கு, மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் க. அன்பழகன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முகாமில் தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். முகாமில் வருவாய் துறை, மின்சார துறை, காவல் துறை, மருத்துவ துறை, சமூக நல துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சாா்ந்த கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு, முன்னாள் மாவட்டக் குழு

உறுப்பினா் கோவி.அய்யாராசு, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா் என்.நாசா், நகரச் செயலாளரும் முன்னாள் அரசு வழக்குரைஞருமான டி.பி.டி. துளசி அய்யா, பேரூராட்சி மன்ற தலைவா் புனிதவதி குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேலு வரவேற்றாா்.

பாபநாசத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேவேந்திரகுல வேளாளா் நல அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாபநாசம் துா்கா மஹாலில் செவ்வாய... மேலும் பார்க்க

ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்

தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மின் கம்பத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்

கும்பகோணத்தில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மின் கம்பத்தின் மீது மோதியது. பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தை நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.... மேலும் பார்க்க

ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

நெல் மழையில் நனைவதைத் தடுக்க நிரந்தர கொள்முதல் நிலையங்களைக் கிடங்குடன் அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூ... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா்... மேலும் பார்க்க