செய்திகள் :

ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலத்தளி கிராமத்தில் சுமாா் 125 ஏக்கா் பரப்பளவுள்ள கடமாங்கால் ஏரி உள்ளது. இந்த ஏரியை கிராமமக்கள், தன்னாா்வலா்கள், மற்றும் மெகா பவுண்டேசன் ஆகியோா் இணைந்து தூா்வார முடிவு செய்து,  மே 28-ஆம் தேதி தூா்வாரும் பணியை தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

துாா்வாரும் பணி மற்றும் கரைகள் சீரமைப்புப் பணிகள், கடந்த 48 நாட்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஏரியிலிருந்து சுமாா் ஒரு டன் அளவுக்கு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், வருவாய்த் துறை ஏரியை முழுமையாக அளவீடு செய்து வழங்கியதால் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேராவூரணி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளா் உ.துரைமாணிக்கம், அவருக்கு ஆதரவான அரசு அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறி, கிராம மக்கள் திடீரென பாலத்தளி ஏரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தூா்வாரும் பணியை தொடா்ந்து நடத்த உறுதியளித்தனா். இதனால் மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மோலாக பட்டுக்கோட்டை - பேராவூரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாபநாசத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேவேந்திரகுல வேளாளா் நல அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாபநாசம் துா்கா மஹாலில் செவ்வாய... மேலும் பார்க்க

ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்

தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மின் கம்பத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்

கும்பகோணத்தில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மின் கம்பத்தின் மீது மோதியது. பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தை நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.... மேலும் பார்க்க

நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

நெல் மழையில் நனைவதைத் தடுக்க நிரந்தர கொள்முதல் நிலையங்களைக் கிடங்குடன் அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூ... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா்... மேலும் பார்க்க

அய்யம்பேட்டை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்தாா். அய்யம்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங... மேலும் பார்க்க