செய்திகள் :

`ஆடு ஜீவிதம்' போல கொடுமையை அனுபவித்த அப்பாராவ் - 20 ஆண்டுகளுக்குப்பின் உறவினரிடம் சேர்ந்த சம்பவம்

post image

`ஆடு ஜீவிதம்' படத்தில் வருவதுபோல் 20 ஆண்டுகள் தமிழகத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த முதியவரை அரசுத்துறையினர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆடு மேய்க்கும் தொழில்

கடந்த ஜனவரி 31 அன்று சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகாவில் கொத்தடிமைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர்துறை உதவி ஆணையர் தலைமையில 'மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புக்குழு'வினர் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், காளையார்கோயில் அருகே கடம்பங்குளத்தில் அண்ணாதுரை என்பவரிடம் ஆந்திரா மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான அப்பாராவ், கடந்த 20 ஆண்டுகளாகக் கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதை உறுதி செய்தனர். இந்தத் தகவல் உடனே சிவகங்கை லெக்டர் ஆஷா அஜீத்துக்குத் தெரிவிக்கப்பட, அவர் உத்தரவின்படி, உடனடியாக அப்பாராவ் மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

சரியாக தன் ஊர், உறவினர் பெயர்களை சொல்லத் தெரியாத அப்பாராவ் கூறிய தகவல்களை வைத்து உறவினர்களை கண்டறிய ஆந்திரா மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குத் தகவல் சொல்லப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பின் அப்பாராவின் உறவினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிவகங்கைக்கு வரவழைக்கப்பட்டு அப்பாராவ் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அரசு அலுவலர்களிடம் பேசியபோது "ஆந்திரா மாநிலம் ஒடிசா எல்லையில் உள்ள பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பாராவ். 20 ஆண்டுகளுக்கு முன் கூலிவேலை செய்வதற்காக நண்பர்களுடன் ராமேஸ்வரம் ரயிலில் வந்துள்ளார். சிவகங்கை ரயில் நிலையத்தில் இறங்கி டீ சாப்பிட்டவர், ரயிலை தவற விட்டுள்ளார். எந்த விவரமும் தெரியாமல் சிவகங்கையில் தவித்து நின்றவரை கடம்பங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை தருவதாகக் கூறி அழைத்துச்சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார்.

நிவாரண நிதி ஆணையை வழங்கும் கலெக்டர்

அதே ஊரில் 5 ஆண்டுகளுக்குப் பின் அண்ணாதுரை என்பவர் அப்பாராவை ஆடு மேய்க்க வைத்துள்ளார். சாப்பாடு மட்டும் போடுவதும், கூலி கொடுக்கவோ, அவரை ஊருக்கு அனுப்பவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்படியே காலம் ஓடியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது அவரை மீட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். சரியான தகவல் இல்லாததால் அவரின் குடும்பத்தைக் கண்டு பிடிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. சிவகங்கை கலெக்டர் மூலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்ட கலெக்டரிடம் விவரம் கூறி அப்பாராவின் குடும்பத்தை ஒருவழியாகக் கண்டுபிடித்தோம்" என்றனர்.

மகள் சாயாம்மாள், மருமகன் தம்புதோரா சந்து ஆகியோர் அப்பாராவைப் பார்த்து அழுதுவிட்டனர். அதைவிடக் கொடுமை, அப்பாராவின் மனைவி 5 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார் என்ற தகவலைக் கேட்டு அப்பாராவ் வெடித்து அழுததுதான்.

கொத்தடிமையாக வைத்திருந்த அண்ணாதுரை மீது வழக்குப் பதிவு செயப்பட்டுள்ள நிலையில் அப்பாராவுக்கு அண்ணாதுரை கொடுக்கவேண்டிய 15 ஆண்டுகளுக்கான கூலி ரூ.8 லட்சத்தை சட்ட ரீதியாக பெற்று வழங்கவும் சிவகங்கை மாவட்ட கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்புக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மகளுடன் அப்பாராவ்

அதேநேரம், மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி, நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் ரூ.3,30,000 நிவாரணத் தொகையை அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதற்கான ஆணையினை கலெக்டர் ஆஷா அஜித் அப்பாராவிடம் வழங்கினார். அதன்பின்பு மகள், மருமகனுடன் அப்பாராவ் ஆந்திராவுக்கு கிளம்பினார்.

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க

`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கட... மேலும் பார்க்க

மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரூ.60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல் வழிப்பறி... 7 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31)... மேலும் பார்க்க