செய்திகள் :

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

post image

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31), அபிகையில் அடோனி(30) ஆகியோர் இன்று கர்நாடகா மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்து இறங்கினர். அவர்களது டிராலி பேக்கை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டு பேரிடமும் மொத்தம் 37 கிலோ போதைப்பொருள் இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.75 கோடியாகும். போதைப்பொருள் மட்டுமல்லாது ரூ.18 ஆயிரம் பணமும், பாஸ்போர்ட், மொபைல் போன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் அகர்வால் கூறுகையில்,''நைஜீரியாவை சேர்ந்த இரண்டு பெண்களும் டெல்லியில் இருந்து கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானத்தில் போதைப்பொருளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இதில் பாண்டா கடந்த 2000-ம் ஆண்டு பிசினஸ் விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். அடோனி 2016-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். டெல்லியில் இருந்து மும்பைக்கு 37 முறையும், பெங்களூருவிற்கு 22 முறையும் போதைப்பொருள் கடத்தி இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கைது

இரண்டு பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஹைதர் அலி என்பவன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தி நைஜீரியாவை சேர்ந்த பீட்டர் என்பவர் 6 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்''என்றார்.

அதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக நடத்திய விசாரணையில் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களுக்கும் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாட்டு பிரஜைகள் பெருமளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க

`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கட... மேலும் பார்க்க

மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரூ.60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல் வழிப்பறி... 7 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

`ஆடு ஜீவிதம்' போல கொடுமையை அனுபவித்த அப்பாராவ் - 20 ஆண்டுகளுக்குப்பின் உறவினரிடம் சேர்ந்த சம்பவம்

`ஆடு ஜீவிதம்' படத்தில் வருவதுபோல் 20 ஆண்டுகள் தமிழகத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த முதியவரை அரசுத்துறையினர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க